/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடும்பு வேட்டை தந்தை - மகன் கைது
/
உடும்பு வேட்டை தந்தை - மகன் கைது
ADDED : மே 30, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :ஓமலுார், தேக்கம்பட்டி, வட்டக்காட்டில் நேற்று, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், ரோந்து சென்றனர்.
அப்போது, என்.எஸ்.தோட்டம் அருகே இருவர், அவர்களது வளர்ப்பு நாய் மூலம் உடும்பை வேட்டையாடியதை பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த காத்தான், 60, அவரது மகன் அருள்குமார், 29, என தெரிந்தது.மேலும் உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றதும் தெரிந்தது. இதனால் இருவரையும் நேற்று கைது செய்தனர்.