/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா
/
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் நாளை திருவிழா
ADDED : ஏப் 30, 2025 01:35 AM
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25ல், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று விளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிகரகம் எடுத்தல், கிடாவெட்டுதல், மாவிளக்கு பூஜை, அம்மன் பவனி வருதல், வாண வேடிக்கை நடக்கிறது. 2 காலை, 9:00 மணிக்கு கம்பம் கும்பம் கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.
ஏற்பாடுகளை, கண்ணனுார் மாரியம்மன் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

