ADDED : ஜூலை 08, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன், 55; விவசாயி. இவரது தோட்டம், அருகில் உள்ள காமாட்சி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இவரது தோட்டத்தின் அருகே வரப்பில் இருந்த செடி, கொடிகளில் தீப்பற்றியது.
காற்று வேகமாக வீசியதால், அருகில் இருந்த சவுக்கு தோப்பில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதில், பத்துக்கு மேற்பட்ட சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.