/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: கலெக்டர்
/
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: கலெக்டர்
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: கலெக்டர்
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: கலெக்டர்
ADDED : அக் 27, 2024 04:01 AM
நாமக்கல்: 'தீபாவளி அன்று, பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடங்களில் அதிக ஒலி இல்லாத, பசுமை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட, 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்-டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி, காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா-கின்றனர். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்-டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அதனடிப்படையில், தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்-கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக மாசு கட்டுப்-பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்-டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக் கூடாது. பொதுமக்கள், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டா-சுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்-டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.