/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., துணை தலைவருக்கு செக் மோசடியில் '6 மாதம்'
/
பஞ்., துணை தலைவருக்கு செக் மோசடியில் '6 மாதம்'
ADDED : ஆக 03, 2025 02:36 AM

ப.வேலுார்:'செக்' மோசடி வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., துணை தலைவருக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பொத்தனுாரை சேர்ந்தவர் அன்பரசு, 50; இவர், பொத்தனுார் டவுன் பஞ்., 3வது வார்டு கவுன்சிலராகவும், டவுன் பஞ்., துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
கடந்த, 2022ல், ப.வேலுார், தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி மகன் சண்முகத்திடம், 7 லட்சம் ரூபாயை அன்பரசு கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறிய அன்பரசு, காசோலை ஒன்றை சண்முகத்திடம் வழங்கியுள்ளார்.
காசோலையை வங்கியில் செலுத்தியபோது, 'பணம் இல்லை' என திரும்பியது. இது தொடர்பாக, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில், சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையில், அன்பரசு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
பரமத்தி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ், ஜூலை, 31ல் தீர்ப்பளித்தார்.
அதில், பொத்தனுார் டவுன் பஞ்., துணை தலைவர் அன்பரசுக்கு, ஆறு மாதம் சிறை, 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

