/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
/
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
மோகனுார்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் தேர்த்-திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.மோகனுார் காவிரி ஆற்றின் வடகரையில், பிரசித்தி பெற்ற கல்-யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்-கிறார். இந்தாண்டு தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 12 வரை தினமும் காலை, பல்லக்கு புறப்-பாடு, ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஹனுமந்த, பெரிய திருவடி கருடசேவை, சேஷ, யானை, இந்திர விமானம், குதிரை வாக-னத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.வரும், 12 அதிகாலை, 5:15 மணிக்கு சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி, 9:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 13ம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு திருக்கொடி இறக்-குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை-யத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.