sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிவன்மலை கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம்

/

சிவன்மலை கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம்

சிவன்மலை கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம்

சிவன்மலை கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம்


ADDED : பிப் 06, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர் திருவிழா கடந்த, 2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் சிறப்பு பூஜை,

மயில் வாகன அபிஷேகம், விநாயகர் வழிபாடு நடைபெற்றது.

முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில், 12:20 மணியளவில் மயில் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் மலையை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 1:00 மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜை நடைபெற்றது. தேரோட்டம் வரும், 11ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை, 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது. 12,13 தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 16ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடைபெறுகிறது. 17ம் தேதி 10:00 மணிக்கு மஹாதரிசனம் நடைபெறுகிறது. 20ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us