/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு
/
பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு
ADDED : டிச 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்த ஆஞ்சநேயருக்குமலர் அலங்கார வழிபாடு
சேந்தமங்கலம், டிச. 29-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, நேற்று, 9 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மலர்களால் மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.