sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை

/

பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை

பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை

பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை


ADDED : ஜூன் 20, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், சுப முகூர்த்த நாட்கள் முடிவடைந்ததால், பூக்களின் விலை பாதியாக குறைந்தது.

ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி, சம்பங்கி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினமும் பூக்களை அறுவடை செய்து, ப.வேலுார் பூக்கள் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

ஏலம் முறையில் பூக்களை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி சமயங்களின்போது, பூக்கள் விலை உச்சத்தில் இருப்பது வாடிக்கை. மற்ற காலங்களில் அதன் விலை குறைந்து காணப்படும். நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்தது. இது, விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது. கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி, நேற்று, 300 ரூபாய்க்கு விற்பனையானது. 150 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி, 60 ரூபாய்க்கு

விற்பனையானது.






      Dinamalar
      Follow us