sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரத்து அதிகமானதால் பூக்கள் விலை சரிவு

/

வரத்து அதிகமானதால் பூக்கள் விலை சரிவு

வரத்து அதிகமானதால் பூக்கள் விலை சரிவு

வரத்து அதிகமானதால் பூக்கள் விலை சரிவு


ADDED : ஏப் 29, 2025 02:11 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:-

ப.வேலுார் தாலுகாவுக்குட்பட்ட சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது, பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகமானது.

ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, 320 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 80 ரூபாய்; 500 ரூபாய்க்கு விற்ற முல்லை, 300 ரூபாய்; 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 260 ரூபாய்க்கு விற்பனையாகின.






      Dinamalar
      Follow us