/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
/
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2024 07:36 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் தலைமை வகித்தார். பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு, தாலுகா அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலை அருகே, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர செயலர் பாலசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் நகர செயலர் குமணன் தலைமையில், கட்சி அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதில் திருநாவுக்கரசு, ரவி, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.