ADDED : ஜூலை 21, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை நடந்தது. கண்புரை உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 148 பேர், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். புற நோயாளியாக, 338 பேர் சிகிச்சை பெற்றனர். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் அருண்குமார், செயலாளர் அரசகுமார், சதீஷ்குமார், பொருளாளர் கிஷோர் உள்பட கலந்துகொண்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாமிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்ல இலவச பஸ் வசதிகளையும், அரிமா சங்க நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.