/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி
/
இலவச நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி
ADDED : ஜூன் 21, 2025 01:11 AM
நாமக்கல், 'வரும், 27ல் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 27 காலை, 10:00 மணிக்கு, நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி நடக்கிறது.
இப்பயிற்சியில் மீன் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக்குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் குறித்து விரிவாக கற்றுத்தரப்படும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு, இந்தாண்டிற்கான மீன் குஞ்சுகள், இடுபொருட்கள் வழங்கப்படும். இதில், நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியில், வேலையில்லா பட்டதாரிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள், 04286--266345, 266650 என்ற தொலைபேசி எண்களிலும், 7358594841 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.