ADDED : செப் 29, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
எருமப்பட்டி, செப். 29-
உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, எருமப்பட்டி கால்நடைத்துறை சார்பில், நேற்று வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இதில், கால்நடை உதவி மருத்துவர் சேகர் கலந்துகொண்டு, 40க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி வழங்கினர். இதேபோல், யூனியனில் உள்ள, 8 கால்நடை மருத்துவமனைகளில், 179 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.