ADDED : ஏப் 13, 2025 04:16 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று பங்குனிமாத பவுர்ணமி தினத்தையொட்டி, மாலை, 6:00 மணி முதல் பக்-தர்கள் மலையை சுற்றி கிரிவலம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, மலை மீது முருகனுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை, அபிஷேக ஆரா-தனை நடந்தது.
மரப்பரை, செக்காரப்பட்டி, குப்பிச்சிபாளையம், எலச்சிபா-ளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், சின்னமணலி, பெரியமணலி, கருங்கல்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகு-தியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்-றனர். மேலும், மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்-டது.பணிக்கு சென்ற மூதாட்டி பலி
எருமப்பட்டி, ஏப். 13
எருமப்பட்டி யூனியன், எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெத்-தாயி, 75; இவர், கடந்த, 11ல் நுாறு நாள் திட்ட வேலைக்கு செல்வதற்காக, நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள மேட்டுப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, பின்னால், வந்த டூவீலர் பெத்தாயி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெத்தாயி உயிரிழந்த-தாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரிக்-கின்றனர்.