/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது
/
முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது
முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது
முன்னாள் மாணவி பாலியல் புகார் அரசு கல்லுாரி பேராசிரியர் கைது
ADDED : செப் 23, 2024 05:31 AM
நாமக்கல்: நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்-லுாரி செயல்படுகிறது. இங்கு விலங்கியல் துறை உதவி பேராசிரி-யராக பணிபுரிபவர் பிரதாப், 44; மதுரையை சேர்ந்தவர்.
மனைவி, இரண்டு மகள்களுடன், நாமக்கல்லில் வசித்து வரு-கிறார்.நாமக்கல்லை சேர்ந்த, 22 வயது இளம்பெண், கல்லுாரியில் விலங்கியல் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று வீட்டில் உள்ளார். இளங்கலை பட்டப்படிப்பு படித்தபோது, உதவி பேரா-சிரியர் பிரதாப்புடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்-போது திருமணம் செய்துகொள்வதாக கூறி, உதவி பேராசிரியர் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து நாமக்கல் போலீசில், மாணவி புகாரளித்தார். இது தொடர்பாக விசாரித்த இன்ஸ்-பெக்டர் கபிலன், போக்சோ சட்டத்தில் உதவி பேராசிரியர் பிர-தாப்பை நேற்று கைது செய்தார்.