sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை

/

பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை

பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை

பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை


ADDED : டிச 21, 2024 01:14 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், டிச. 21-

வெண்ணந்துார் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, கால்நடை தீவன சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சோளத்தட்டு பயிர், வளர்ச்சி அடையாமல் அதிக மழை காரணமாக அழுகியது. தொடர் மழை காரணமாக, தீவனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு, பச்சை சோளத்தட்டு தீவனம் விலை அதிகரித்துள்ளது. வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், விவசாயம் அதிகமாக உள்ளதால் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. மாடுகளுக்கு உணவாக கொடுக்கப்படும் பச்சை சோளத்தட்டு விலை அதிகரிப்பால், கால்நடை வளர்ப்பவர்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து, அளவாய்ப்பட்டி விவசாயி ஒருவர் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சோளத்தட்டு குறைவாக கிடைக்கிறது. தேடிச் சென்று தீவனம் வாங்கி வருகிறோம். வழக்கமாக ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us