sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை

/

கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை

கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை

கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை


ADDED : பிப் 04, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம்பிள்ளை: கஞ்சமலை அடிவாரத்தில், 54 அடியில் பிரம்மாண்ட சிவகுடும்ப சுதை சிலையுடன் கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடிலிங்-கேஸ்வரர் கோவில் கட்டும் திருப்பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. சேலத்தில், நவகோடி சித்தர்கள் தொண்டு அறக்கட்-டளை என்ற தன்னார்வ அமைப்பு, பல்வேறு கோவில்

திருப்பணி-களுக்கான உதவிகள், ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அறக்கட்டளை

சார்பில், இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரம் முருங்கப்பட்டி சித்தர்காடு பெத்தம்பட்டி கிராமத்தில், 54

அடியில் பிரம்மாண்டமான சிவன், பார்வதி, கண-பதி, முருகன் அனைவரும் குடும்ப சகிதமாக காட்சியளிக்கும்

சுதை சிற்பத்துடன், கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடிலிங்-கேஸ்வரர் கோவில் கட்டும் திருப்பணிகள் நேற்று

காலை, 6:30 மணிக்கு பூமி பூஜையுடன் துவங்கியது. சிவ புராண பாராயணம், சிவனடியார்களின் ஆன்மிக

சொற்பொழிவு நடந்தது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு, 48, கூறுகையில், ''எண்ணற்ற சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வரும்

சித்தர்மலை என்ற கஞ்சமலை அடிவாரத்தில், எங்களுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில் உலகிலேயே பெரிய

பிரம்மாண்டமான சிவகு-டும்பம், சிமென்ட் கலவையால் ஆன சுதை சிற்பம் அமைக்கப்ப-டவுள்ளது.இத்துடன் கருங்கற்களால், கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடி-லிங்கேஸ்வரர் கோவில், 2 கோடி ரூபாய்

மதிப்பில் நான்கு ஆண்-டுகளில் கட்டி முடித்து கும்பாபிேஷகம் செய்ய திட்டமிட்டு பூமி பூஜை செய்துள்ளோம்,''

என்றார்.






      Dinamalar
      Follow us