/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் அரிசி கடத்தலில்ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'
/
ரேஷன் அரிசி கடத்தலில்ஈடுபட்டவர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஏப் 20, 2025 01:32 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 7ல், வெண்ணந்துார் அடுத்த மதியம்பட்டி ஏரிக்கரை கரியபெருமாள் கோவில் அருகே, எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 1,610 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி கூத்தங்காட்டை சேர்ந்த கோபால், 49, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய, 'டாடா சுமோ' காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், கைது செய்யப்பட்ட கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் உமா, கோபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதையடுத்து, இன்ஸ்பெக்டர் (பொ) சுதா, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோபாலை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.