ADDED : ஆக 06, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில், இரவில் குளிர்ந்த சீதோஷணம் நிலவி வந்த நிலையில், பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில் திடீரென சூழ்ந்த கருமேகங்களால் மழை பெய்தது.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தெற்கு காலனி, குப்பாண்டபாளையம், சாணார்பாளையம், தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது.மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.