sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

/

ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை


ADDED : மே 18, 2025 05:19 AM

Google News

ADDED : மே 18, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்,: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று அதிகாலை சிறிது நேரம் துாறல் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேக மூட்டத்-துடன் காணப்பட்டது. காலை, 10:00 மணியளவிலம் வெயில் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இதையடுத்து, மாலை, 5:00 மணியளவில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியயது. சிறிது நேரத்தில் இடி, மின்ன-லுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை, 6:30 மணிக்கு தொடங்கிய மழை இரவு, 8:30 மணி வரை நீடித்தது.

ராசிரத்தில் கனமழை பெய்ததால், பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசி-புரம் அடுத்த புதுப்பாளையம், கவுண்டம்பாளையம், அணைப்பா-ளையம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நாமக்கல், மோகனுாரில்...

நாமக்கல் நகரை பொறுத்த வரை, நேற்று காலை முதல் மாலை வரை வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால், சாலையோ-ரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதேபோல், மோகனுார் பகுதியிலும், இரவு, 9:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கொட்டித்தீர்த்த கோடை மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us