/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை
/
சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை
ADDED : மார் 06, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம் நகராட்சியில், மகளிர் சுய உதவி குழுவின-ருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.
அப்போது அவர், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கி வரும் சலுகை, திட்டங்கள் பற்றியும், குறிப்பாக பெண்களுக்கு விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விளக்கினார். நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், நகர பொறுப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, செந்-தில்குமார், சமுதாய அமைப்பாளர் கவுசல்யா, மகாலட்சுமி, உள்-ளிட்ட சுய உதவி குழுக்களை சார்ந்த மகளிர் பங்கேற்றனர்.

