ADDED : செப் 06, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
சேலம்-கோவை காவேரி பாலத்தில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, விற்பனைக்காக பையில், 20 பீர் பாட்டில்களை வைத்திருந்ததும், இவர் திருச்செந்துார் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், 35, என்பதும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்து, 20 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.