sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா துவக்கம்; மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்

/

கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா துவக்கம்; மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா துவக்கம்; மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா துவக்கம்; மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஆக 03, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சுற்றுலா தலமான கொல்லிமலையில், 'வல்வில் ஓரி' விழா கோலாகலமாக துவங்கியது.

விழாவில், மலர் கண்காட்சியை, ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் மிக முக்கியமானது, கடையேழு வள்ளல்களில் ஒருவரான, 'ஓரி' மன்னன், கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். ஓரி மன்னனின் கொடைத்தன்மை, வீரத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி, 17, 18ல், தமிழக அரசு சார்பில். 'வல்வில் ஓரி' விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, கொல்லிமலை செம்மேட்டில் நடந்த, 'வல்வில் ஓரி' விழா துவக்க விழாவிற்கு, ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமை வகித்தார். நாமக்கல் கிளாரினெட் வித்வான் பிரபு வேனுகோபாலின் மங்கள இசையுடன் விழா துவங்கியது.விழாவை முன்னிட்டு, தாவரவியல் பூங்காவில் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி துவக்கி வைத்தார். இங்கு குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் ஆன மலர் படுக்கை, மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்தன.ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை வடிவம், பலவண்ண மலர்களால் ஆன ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி, காதல் சின்னம், காய்கறிகளை கொண்டு பட்டாம் பூச்சி, தானியங்களை கொண்டு செய்யப்பட்ட, 'மக்களுடன் முதல்வர்' சின்னம் ஆகியவை கண்களுக்கு விருந்தளித்தன. மூலிகைகள் குறித்து, சுற்றுலா பயணிகள், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர், பயன்படும் பகுதி, மருத்துவ பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து மருத்துவ பயிர்கள் கண்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'வல்வில் ஓரி' மன்னன், வில்வித்தையில் சிறந்து விளங்கியதால், அவரை போற்றும் வகையில், வில் வித்தை போட்டி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இன்று, 2ம் நாள் நிகழ்ச்சியில் இறுதி போட்டி நடக்கிறது.






      Dinamalar
      Follow us