/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
/
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
ADDED : நவ 13, 2024 07:30 AM
ப.வேலுார்: ப.வேலுாரில், மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்படுகிறது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதியை சேர்ந்த விவசாயிகள், தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த ஏலத்தில், அதிகபட்சம் கிலோ, 37.40 ரூபாய், குறைந்தபட்சம், 22.29 ரூபாய், சராசரி, 33 ரூபாய் என, மொத்தம், 46,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 41.50 ரூபாய், குறைந்தபட்சம், 27.79 ரூபாய், சராசரி, 38.10 ரூபாய் என, 2,300 தேங்காய்கள், 31,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.