sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு; விலை சரிவால் விவசாயிகள் கவலை

/

பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு; விலை சரிவால் விவசாயிகள் கவலை

பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு; விலை சரிவால் விவசாயிகள் கவலை

பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு; விலை சரிவால் விவசாயிகள் கவலை


ADDED : ஜூலை 11, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனை செய்-யப்பட்டது.

இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ப.வேலுார் தாலுகாவில், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்-கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது, பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகரித்தது.அதன்படி, கடந்த வாரம், குண்டுமல்லி கிலோ, 650 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 450 ரூபாய்க்கும்; 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 40 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 100 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்ற முல்லை, 400 ரூபாய்க்கும் விற்பனையா-கின. பூக்கள் விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us