/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரிச்சாலையில் வேலி அமைக்க வலியுறுத்தல்
/
ஏரிச்சாலையில் வேலி அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரிச்சாலையில் வேலி அமைக்க வலியுறுத்தல்
மல்லசமுத்திரம், நவ. 3-
மல்லசமுத்திரம் அருகே, மேல்முகம் பஞ்.,க்குட்பட்ட சூரியகவுண்டம்பாளையம் ஏரியை ஒட்டி, மல்லசமுத்திரம் - கொசவம்பாளையம் சாலை சென்றுகொண்டுள்ளது. இச்சாலையை ஒட்டி ஏரி அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் நோக்கில் சாலையோரத்தில் சென்றால், தவறி ஏரியில் விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர்பலிகூட நேரலாம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிச்சாலையில் தடுப்புவேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.