ADDED : ஜூலை 13, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார், வெள்ளிச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கம், 26, லாட்டரி விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.