/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வரும் 11ல் நேர்முகத்தேர்வு
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வரும் 11ல் நேர்முகத்தேர்வு
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வரும் 11ல் நேர்முகத்தேர்வு
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வரும் 11ல் நேர்முகத்தேர்வு
ADDED : ஆக 09, 2025 01:46 AM
நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசு சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கைக்கு, வரும், 11ல் நேர்முகத்தேர்வு நடக்கிறது' என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சார்பில், அகமதாபாத்தில் இயங்கி வரும் தேசிய வள அமைப்பான இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்(இ.டி.ஐ.ஐ.,) சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட, 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
துணி, சணல் பொருட்களில் இருந்து தையல் மூலம் லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மனி பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான, ஒரு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, ரெட்டிப்பட்டி அருகில் இந்த பயிற்சி மையம் அமைந்துள்ளது. இப்பயிற்சியில், பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு, வரும், 11 காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், 88258-12528 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தங்கள் பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.