/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
/
பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
ADDED : டிச 14, 2025 08:26 AM
நாமக்கல்: கொல்லிமலை, அரியூர் புதுவலவு அரசு மேல்நி-லைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரிய-ராக காளிதாஸ் உள்ளார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை)புரு-சோத்தமன், திறன் வகுப்பு மாணவர்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இடைநிற்றல் குழந்தைகளின் விபரங்கள், அவர்-களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது குறித்தும்,தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பள்ளியின் பசுமை பரப்பை அதிக-ரிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்-றுகள் நடப்பட்டன. தலைமையாசிரியர் காளிதாஸ், மாதிரி மேல்நிலைப்பள்ளி தலை-மையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தலைமையாசிரியர் காளிதாஸ் கூறியதாவது: எங்கள் பள்ளியில் படிக்கும் மாண-வர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 500க்கு மேலும், பத்தாம் வகுப்பில், 500க்கு, 475 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், தாலா, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்
என, அறிவித்துள்ளோம். இதையடுத்து, மாணவர்கள் முனைப்புடன் கவனம் செலுத்தி படித்து வருகின்-றனர். ஆசிரியர்களும் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

