ADDED : டிச 28, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், இலவச கலை வகுப்பு நடந்தது. இதில், 16 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி மூலம், குழந்தைகளின் உடல் வலிமை, மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, தன்னம்-பிக்கை, ஒழுக்கம், நேர மேலாண்மை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. அனுபவமிக்க பயிற்றுவிப்-பாளர்களின் வழிகாட்டுதலுடன் அடிப்படை நுட்-பங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் சுய பாது-காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

