/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
/
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
ADDED : மே 20, 2025 07:29 AM
நாமக்கல்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியானது. அதில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சுபிக்ஷா, சிபிதா ஆகியோர், 500க்கு, 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர்.
மாணவியர் ஸ்ரீநிதி, மதுமிதா கவுசல்யா ஆகியோர், 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி பிரித்திகா, 488 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர். மேலும், தேர்வு எழுதிய, 153 மாணவர்களில், 30 பேர், 475 மதிப்பெண்களுக்கு மேல், 57 பேர், 450க்கு மேல், 106 பேர், 400க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பாடவாரியாக, தமிழில், 99, ஆங்கிலத்தில், 99, கணித பாடத்தில், 98, அறிவியலில், 100, சமூக அறிவியலில், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், அறிவியலில், 5 பேர், சமூக அறிவியலில், 3 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜா, தாளாளர் ராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குனர் ராஜராஜன், முதல்வர் சாரதா, ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.