/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் வக்கீல்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மூன்று சட்டங்-களை சமஸ்கிருதத்தை நுழைத்து திருத்தி உள்-ளனர். இதன் ஷரத்துகள் மக்களுக்கு விரோதமாக இருப்பதால் திரும்ப பெற வேண்டும் என, கோஷம் எழுப்பினர். சங்க செயலர் நடராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்ட-மைப்பின் துணைத்தலைவர் தீனதயாளன், துணைச்செயலர் ஐயப்பன், குமாரபாளையம் வக்-கீல்கள் சங்க பொருளாளர் நாகப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.