sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ரோேபாட்டிக்ஸ்' செயற்கை நுண்ணறிவில் கற்றல் பயிற்சி முகாம்

/

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ரோேபாட்டிக்ஸ்' செயற்கை நுண்ணறிவில் கற்றல் பயிற்சி முகாம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ரோேபாட்டிக்ஸ்' செயற்கை நுண்ணறிவில் கற்றல் பயிற்சி முகாம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ரோேபாட்டிக்ஸ்' செயற்கை நுண்ணறிவில் கற்றல் பயிற்சி முகாம்


ADDED : பிப் 16, 2025 03:47 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், குளோபல் அகா-டமி ஆப் எக்சலன்ஸ் சார்பில், ரோேபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அனுபவ கற்றல் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. டயட் விரிவுரையாளர் பானுமதி வரவேற்றார். அமெ-ரிக்கா குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் பன்னாட்டு ஒருங்கி-ணைப்பாளர்கள் பிரியா யாஸ்மின், மத்தேயு, மங்கையர்கரசி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

தற்போது, தொழிற்சாலைகள், மருத்துவத்துறை, விவசாயம் போன்றவற்றில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவும் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் மனித வாழ்வில் மாற்றங்களையும், முன்னேற்றங்க-ளையும் உருவாக்கி வருகின்றன. ரோபோக்களை இன்ஜினியர்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்றி, ஆசிரியர்க-ளாலும் ரோபோக்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ரோபோக்களை சிக்னல் கொடுத்து மோட்டார்களை இயக்குதல், சென்சார்களை பயன்படுத்துதல், கட்டளையிடும் சர்க்யூட்களை பயன்படுத்துதல், என்னென்ன வேலைகளுக்கு ரோபோக்களை வடிவமைக்கலாம் என்பது உள்பட, 12 செயல்-முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 'பள்ளிகளுக்கு ரோபோ கிட்-டுகள் தேவைப்பட்டால், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் பிரபா-கரன் கூறினார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்-வாகிகள் சண்முகம், கருணாகர பன்னீர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us