ADDED : ஆக 18, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
குமாரபாளையம்: குமாரபாளையம் கிளை நுாலகம் மற்றும் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், நுாலகர் தின விழா கிளை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நுாலக தந்தை அரங்கநாதன் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கிளை நுாலகர் மாரியாயி வர-வேற்றார். குமாரபாளையம் கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்தார். நுாலக தந்தை அரங்கநாதனின் நுாலக பணி, சாதனைகள் குறித்து எழுத்தாளர் கேசவ-மூர்த்தி மற்றும் மாணவர் ஹரீஷ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, சிறுகதை போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு, சான்-றிதழ், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
