ADDED : டிச 20, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, கலைஞர் நுாலகம் திறப்பு விழா, நேற்று நடந்தது. நாமக்கல், தி.மு.க., மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, நுாலகத்தை பொது-மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
நுாலகத்தில் பழமை-யான அரிய நுால்கள் முதல் தினசரி நாளிதழ்கள் வரை உள்ளதால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்கள் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் தனராசு, லலித்குமார், பொத்-தனுார் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர், நாமக்கல் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கண்ணன், வக்கீல் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

