/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
/
மாவட்டத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
ADDED : நவ 06, 2025 01:12 AM
நாமக்கல், 'மாவட்டத்தில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியின், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லை. பகல் நேர வெப்பநிலை, 34 டிகிரி செல்ஷியஸ் மற்றும் இரவு நேரம், 25 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் நிலவியது. நேற்று முதல் 9 வரை, ஐந்து நாட்கள் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 29 டிகிரி செல்ஷியஸ் முதல், 33 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 19 டிகிரி செல்ஷியஸ் முதல், 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும்.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 50 முதல், 90 சதவீதம் வரை இருக்கும். காற்று வட மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 4 கி.மீ., முதல் 5 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நேற்று மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று, 12 மி.மீ., 7ல், 12 மி.மீ., 8ல், 11 மி.மீ., 9ல், 10 மி.மீ., என்ற அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

