நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன், 37.
இவர் பவித்திரம் பஞ்., அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட துண்டு லாட்டரி சீட்டுகளை விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை துண்டு சீட்டில் எழுதி வைத்து விற்பனை செய்த ரகுநாதனை, போலீசார் கைது செய்தனர்.