ADDED : நவ 09, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர்மலை பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை சிலர் துண்டு சீட்டில் எழுதி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கபிலர்மலை பகுதியில், எஸ்.ஐ., திவ்யா தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்-டனர்.
அப்போது, கபிலர்மலையை சேர்ந்த ஞானசேகரன், 40, என்பவர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து, பரமத்தி சிறையில் அடைத்தனர்.

