sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு

/

மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு

மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு

மனிதனாக வாழ கம்பனின் எழுத்துக்களை படிக்கணும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேச்சு


ADDED : அக் 28, 2024 05:08 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''மனிதனாக நாம் வாழ வேண்டும் என்றால், கம்பனின் எழுத்துக்-களை படிக்க வேண்டும்,'' என, கம்பர் விருது வழங்கும் விழாவில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பேசினார்.

கம்பன் கழகம் சார்பில், கம்பர் விருது, கம்பர் மாமணி விருது, துறைசார் வல்லுனர் விருதுகள், கம்பன் கழக போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, நாமக்கல்லில் நடந்-தது. 'கம்பனின் வரங்கள், சாபங்கள்' என்ற தலைப்பில், நுால் வெளியீட்டு விழா நடந்தது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவா-மிநாதன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதா-வது:நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், மகாதேவன், சுரேஷ்குமார் ஆகியோர் தமிழறிஞர்கள். நான் தமிழ் மீது பற்று கொண்டவன், அறிஞன் இல்லை. கம்பனை போற்றி பாடியவர் பாரதியார். பார-தியாரை பிடிக்கும் அனைவருக்கும் கம்பனையும் பிடிக்கும். கம்ப-ராமாயணத்தில் சகோதரத்துவத்தை கம்பன் வலிமையாக வலியு-றுத்துகிறார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் தெரிவித்த கருத்துகளை அப்போதே கம்பன் தெரிவித்து விட்டார். ராமரின் வாழ்க்கை மூலமாக, கம்பன் இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார். ராவணன் பல்வேறு சக்திகள் கொண்டவனாக இருந்த போதிலும், அவனுக்கு புலனடக்கம் இல்லாததால், அழிவை சந்திக்க நேரிட்டான். மனிதனாக நாம் வாழ வேண்டும் என்றால், கம்-பனின் எழுத்துக்களை படிக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழின் நிலை சற்று கவலைக்கிடமாக இருக்கிறது. கம்பன் கழகம் மூலமாகவே, தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கம்பன் கழக செயலாளர் அரசு பரமேசுவரன், தலைவர் சத்திய-மூர்த்தி, திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், குருவாயூ-ரப்பன், பொருளாளர் தில்லைசிவக்குமார் ஆகியோர்

கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us