ADDED : ஏப் 08, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட தீவன மூலப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.
அதன்படி, கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் தீவன மூலப்பொருளான மக்காச்சோளம், 2,600 டன், ஆந்திரா மாநிலம், சாத்தனுாரில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டது. பின், அங்கிருந்து கூட்ஸ் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதிகளில் செயல்படும் தீவன அரவை ஆலை
களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
