/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கர்நாடகத்தில் இருந்து வரத்தான மக்காச்சோளம்
/
கர்நாடகத்தில் இருந்து வரத்தான மக்காச்சோளம்
ADDED : டிச 06, 2024 07:31 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, கோழிப்பண்ணைகளின் தேவைக்காக, 2,600 டன் மக்காச்சோளம் கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் வரத்தானது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் நாமக்கல் வரும்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணை தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக, கர்நாடக மாநிலம் பாகல்கேட்டில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் மக்காச்சோளத்தை வாங்கி சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி, தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.