ADDED : டிச 08, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் பாதையில் ஆண் சடலம் மீட்பு
பள்ளிப்பாளையம், டிச. 8-
பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் ரயில் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு, நேற்று தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றினர். இறந்தவருக்கு, 40 வயதிருக்கும். அவர் யார்? கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.