/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
/
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : ஜன 08, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கரியாம்பட்டியை சேர்ந்தவர் இளையான் மகன் லோகநாதன், 49; கூலித்தொழிலாளி. இவர், அடிக்கடி முயல், பன்றிகளை வேட்டையாடுவதாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் லோகநாதன் வீட்டில் சோதனையிட்டனர். அப் போது, உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆயில்பட்டி போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.