/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி
/
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி
ADDED : டிச 16, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மல்லுார் அருகே, பாலப்பட்டி பூசாரிகாடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல், 45. இவர், நேற்று புதுச்சத்திரம் அருகே பெருமாள் கோவில் மேடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி, குழந்தைவேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.