/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
/
அதிக மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜூன் 09, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தவர் சண்முகம், 65; இவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை விட்டு பிரிந்து, தனியாகி வசித்து வந்தார்.
கடந்த, 6ல், வேலைக்கான கூலி பணத்தை வாங்கிக்கொண்டு வந்த சண்முகம், மறுநாள் விசைத்தறி கூடத்திற்கு வேலைக்கு வர-வில்லை. உடன் பணியாற்றுபவர்கள் பல்வேறு இடங்களில் தேடி-யுள்ளனர். அப்போது, அரசு மருத்துவமனை முன் மயங்கி கிடப்ப-தாக தகவல் கிடைத்தது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.