ADDED : ஜூலை 15, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணி, 66; தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் சந்தைப்பேட்டை பகுதி
யில் செல்லும் ஓடையில் தவறி விழுந்துவிட்டார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.