sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செப்., 30க்குள் மனநல நிறுவனங்கள் பதிய வேண்டும்: கலெக்டர் எச்சரிக்கை

/

செப்., 30க்குள் மனநல நிறுவனங்கள் பதிய வேண்டும்: கலெக்டர் எச்சரிக்கை

செப்., 30க்குள் மனநல நிறுவனங்கள் பதிய வேண்டும்: கலெக்டர் எச்சரிக்கை

செப்., 30க்குள் மனநல நிறுவனங்கள் பதிய வேண்டும்: கலெக்டர் எச்சரிக்கை


ADDED : ஆக 27, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும், செப்., 30க்குள், தமிழக மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் முழுவதும், மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மனநல நிறுவனங்கள் அனைத்தும், மனநல பராமரிப்பு சட்டப்படி உரிமம் பெற, மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் மனநல மையங்கள், செப்., 30க்குள் உரிய முறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, இணையதள முகவரியிலோ, தமிழக மாநில மனநல ஆணைய அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம். விபரங்களுக்கு, 044-26420965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us