sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மே 5ல் வணிகர் தின மாநில மாநாடு; குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு

/

மே 5ல் வணிகர் தின மாநில மாநாடு; குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு

மே 5ல் வணிகர் தின மாநில மாநாடு; குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு

மே 5ல் வணிகர் தின மாநில மாநாடு; குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு


ADDED : ஏப் 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'வரும், மே, 5ல் நடக்கும் வணிகர் தின மாநில மாநாட்டுக்கு, கடைகளுக்கு விடுமுறை அளித்து, குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், மே, 5ல், வணிகர் தினத்தன்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 42வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு, மதுராந்தகத்தில், மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்கிறார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாடு தீர்மானம் வாசிக்கிறார்.

பேரமைப்பின் மண்டல தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். மேலும், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அனைத்து இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். வரும், மே, 5ல் கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.

வணிகர் உரிமையை மீட்டெடுக்கவும், வணிகர் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வணிகர் இன வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தவும், இம்மாநாட்டு திடலில், வணிகர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். தமிழகம் முழுவதிலும் இருந்து, லட்சக்கனக்கான வணிகர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 200க்கு மேற்பட்ட வாகனங்களில், 5,000 வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us