sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை

/

நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை

நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை

நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பற்றாக்குறை சரிசெய்ய வழிமுறை


ADDED : அக் 31, 2025 01:19 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை: நெல் சாகுபடியில் துத்தநாக சத்தின் பங்கு மிக முக்கியம். தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்வதால், மண்ணில் உள்ள துத்தநாக சத்தை பயிர்கள் எடுத்துக்கொள்வதால் பற்றாக்குறை உருவாகிறது. களர் நிலங்கள், மணிச்சத்து அதிகம் உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.

நெல் நடவு செய்த, 2, 4 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட இளம் நெற்பயிரின் இலைகளின் மைய நரம்பில் துாசி நிறைந்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இதனால் துார் வெடித்தல் குறைவாக காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். இதை சரி செய்ய ஏக்கருக்கு, 10 கிலோ ஜிங் சல்பேட் உரத்தை, 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். ஏக்கருக்கு, 5 கிலோ நெல் நுண்ணுாட்ட உரத்தை, 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். விபரங்களுக்கு பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us